tamilnadu

img

தெற்கு கர்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு மார்ச் 31 வரை போக்குவரத்து நிறுத்தம்

மங்களூரு, மார்ச் 21- தெற்கு கர்நாடகத்தி லிருந்து கேரளத்துக்கான போக்குவரத்து இம்மாதம் 31  வரை தடை செய்யப்பட்டு ள்ளது. சனியன்று (மார்ச்  21) பகல் 2 மணி முதல்  இந்த தடை விதிக்கப்ப ட்டுள்ளதாக தெற்கு கன்னட துணை ஆணையர் சிந்து பி.ரூபேஷ் கூறினார். காசர்கோடு மாவ ட்டத்தில் வெள்ளியன்று கோ விட் 19 பாதிப்புக்குள்ளான ஆறுபேர் கண்டறிப்பட்டதன் அடிப்படையில் சாலையை மூடிவிட கர்நாடக அரசு முடிவு செய்தது. அவசரத் தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 66 இல்  சென்று தலப்பாடி வழி யாக மட்டுமே அனுமதிக்கப்ப டுகின்றன. முறையான சுகா தார பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் தவிர அனைத்து எல்லை சாலை களும் கேரள அரசால் வெள்ளி க்கிழமை மூடப்பட்டன.

;