tamilnadu

img

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தன. 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்.
பின்னர் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ததால்,14 மாத கால கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவற்றில் 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.  சிவாஜி நகா், கே.ஆா்.புரம், மகாலட்சுமி லேஅவுட், யஷ்வந்தபுரம், ஹொசகோட்டை, விஜயநகரா, ராணிபென்னூா், ஹிரிகேரூா், கோகாக், அத்தானி, காகவாடா, எல்லாபுரா, கே.ஆா்.பேட்டை, ஹுன்சூா், சிக்பள்ளாபூா் ஆகிய 15 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. காலை முதலே மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். தோ்தல் களத்தில் 165 வேட்பாளா்கள் உள்ளனா். 
15 தொகுதிகளிலும் மொத்தம் 37,77,970 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். வாக்குகள் டிச.9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.