tamilnadu

img

மோடியின் பேச்சுக்கு பாஜக வேட்பாளர் எதிர்ப்பு

பெங்களூரு:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஊழல்வாதி என்று பிரதமர் மோடி பேசியதற்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும், சாம்ராஜ் நகர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஸ்ரீனிவாச பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


“ராஜீவ் காந்தியை எல்டிடிஇ-யினர் திட்டமிட்டு படுகொலை செய்தனர். அவர் ஒன்றும் ஊழல் குற்றச்சாட்டினால் உயிரிழக்கவில்லை. அவர் ஊழல் செய்தார் என கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏன் நான் கூட நம்ப மாட்டேன். ராஜீவ் செய்த பல நன்மைகளை, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வெகுவாக புகழ்ந்துள்ளார். நானும் ராஜீவ் காந்தியின் நற்செயல்களை கண்டுள்ளேன். 


"மோடி மீது எனக்கு அளவுகடந்த மரியாதை உண்டு. ஆனால் தற்போது அவர் ராஜீவ் காந்தி குறித்து பேசுவது தேவையில்லாதது” என்று ஸ்ரீனிவாச பிரசாத் கூறியுள்ளார். 

ஸ்ரீனிவாச பிரசாத், வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்தவர். அதன்பிறகு காங்கிரஸில் இணைந்து மாநில அமைச்சரானார். பின்னர், மீண்டும் கடந்த 2017-ஆம் ஆண்டு பாஜக-விலேயே இணைந்தார். தற்போது சாம்ராஜ் நகர் வேட்பாளராக உள்ளார்.ராஜீவ் காந்தி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு பாஜக தலைவர் ஒருவரே எதிர்க்கருத்து தெரிவித்திருப்பது, பாஜக-வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.