tamilnadu

img

கர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழப்பு

கர்நாடகாவில் தேசியக் கொடிக் கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ,கொப்பால் மாவட்டத்தில் அரசு மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு தேசியக் கொடி ஏற்றப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றும் பணியை மாணவர்கள் சிலர் மேற்கொண்டனர். விடுதியின் முதல் தளத்தில் நின்று மாணவர்கள் கொடிக்கம்பத்தை நீக்கிய போது, கொடிக்கம்பம் திடீரென அருகில் இருந்த மின்சாரக் கம்பியின் மீது மோதியுள்ளது. 
இச்சம்பவத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

;