tamilnadu

img

‘தமிழி’ உலக சாதனை விழா

கரூர், பிப்.2-  பரணி பார்க் சாரணர் மாவட் டம் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கம் மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை இணை ந்து கரூர் பரணி பார்க் பள்ளி வளா கத்தில் சங்க இலக்கிய நூல்களை தமிழ்மொழியின் முதல் எழுத்து  வடிவமான தமிழி எழுத்து வடி வத்தில் புத்தகங்களாக ஆவ ணப்படுத்தும் தமிழி உலக சாதனை திருவிழா நடைபெற்றது.  பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரங்கன், செய லர் பத்மாவதி தலைமை தாங்கி னர். அறங்காவலர் சுபாஷினி முன் னிலை வகித்தார். சங்க இலக்கிய அறிஞரும் மதுரை காமராசர் பல்க லைக்கழக தமிழியல் புலம் தலை வருமான இராமராஜபாண்டியன், கல்வெட்டு ஆய்வாளர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கருப்பண் ணன் மற்றும் உலக சாதனை புத் தக நடுவர் டிராகன் ஜெட்லீ நடு வர்களாக கலந்து கொண்டனர்.  பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வரும் திரு வள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கத்தின் தேசிய ஒருங்கி ணைப்பாளரும், மாநிலம் முழு வதும் தமிழி எழுத்துக்களை பயிற்சி அளித்து வருபவருமான முனைவர் ராமசுப்பிரமணியன் தலைமையில் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தமிழி எழுத்துப் பயிற்சி பெற்ற மொத்தம் 4500 சாரணர் ஆசிரியர்களும் மாண வர்களும் இணைந்து சங்க இலக்கியத்தின் 36 நூல்களை யும், தமிழி எழுத்து வடிவத்தில் புத்தகங்களாக ஆவணப்படுத் தும் உலக சாதனை முயற்சியில் கலந்து கொண்டனர். பதிற்றுப்பத்து நூல் 3 நிமிடம் 41 நொடிகள் தமிழி எழுத்து வடி வில் எழுதி முடித்தனர். நிறைவாக நற்றிணை சங்க இலக்கிய நூல் 24 நிமிடம் 55 வது நொடியில் எழுதி முடிக்கப்பட்டது. 25 நிமிடத்தில்  சங்க இலக்கியங்களில் பதி னெண்மேற்கணக்கு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல் களும் மொத்தம் 36 நூல்களும் முழுமையாக தமிழி எழுத்தில் ராம சுப்பிரமணியன் தலைமையிலான ஆசிரியர்கள் மாணவர்கள் 4500 பேர் குழுவினரால் 24 நிமிடம் 55 நொடியில் எழுதி முடிக்கப்பட் டது.  எழுதி முடிக்கப்பட்ட தமிழி சங்க இலக்கிய கையெழுத்து பிரதிகள் அனைத்தையும் கணினி யின் உதவியோடு விரைவில் புத்த கமாக வெளியிட்டு சங்க இலக்கிய நூல்களை தமிழி வடிவிலான புத்தகங்களாக ஆவணப்படுத்து வோம் என்று ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.  பரணி பார்க் கல்விக் குழும மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து தமிழி வடிவில் சங்க இலக்கிய நூல்களை எழுதியதன் மூலம் தமிழின் பெருமையை உலகறிய செய்ததாக தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அறி ஞர்களும் பொதுமக்களும் மகி ழ்ந்து பாராட்டினர். திருவள்ளு வர் மாணவர் இளைஞர் இயக்கத் தின் தேசிய தலைவரும், இந்திய தொல்லியல் நினைவு சின்னங்கள் ஆணையத்தின் தலைவருமான தருண் விஜய், தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன், தமிழக பொது நூல கத் துறை இயக்குனர் முனை வர் குப்புசாமி, மூத்த கல்வெட்டு அறிஞர் குடவாயில் பாலசுப்ர மணியன் உள்ளிட்ட பலரும் சாதனை புரிந்த மாணவர்களை யும் ஆசிரியர்களையும் பாராட்டி னர்.  பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் ராமசுப்ர மணியன் தலைமையில் பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி பரணிபார்க் முதல்வர் சேகர், குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி, பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா மற்றும் துணை முதல்வர்கள் ஆசிரியர்கள் இதற் கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.