கரூர், செப்.7- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப கழகம் சார்பில் 6 முதல் 12 வகுப்பு மாண வர்களுக்கு ஆய்வு அறிக்கை தயார் செய்து வழங்கும் 27-வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம், அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் வெண்ணமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தாளாளர் கே.பாண்டியன் தலைமை வகித்தார். முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துவக்கி வைத்தார். மாநில செயலாளர்கள் எஸ்.டி.பால கிருஷ்ணன். மு.தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். சேரன் பள்ளி முதல்வர் பழனியப்பன், கிரெசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சாகுல்அமீது, அறி வியல் இயக்க மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாட்சா ஆகி யோர் பேசினர். ஆசிரியர்கள் திலகவதி, பெ.தனபால், ஆரோக்கிய பிரோம்குமார், சண்முகவடிவு, அம்சவள்ளி உள்பட அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி ஆசிரி யர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போன்று குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஆசிரியர்கள் 75 பேர் கலந்து கொண்டனர்.