tamilnadu

img

கரூர் அரசு மருத்துவமனை முதல்வரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூன் 11- செவிலியர்கள் பணிகள் அல்லாத பணிகளை செய்ய சொல்லி மருத்துவ மனை நிர்வாகம் வற்புறுத்தி வருவதை கண்டித்தும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்,  செவிலியர்களை தரக் குறைவாகவும், தவறான வார்த்தைகளை பயன் படுத்தி பேசுவதை கண்டித்தும் கடந்த 5-ம் தேதி அரசு கரூர் மாவட்ட மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கோட்டாட்சியர் சர வணகுமார் தலைமையில் இருதரப்பை யும் அழைத்து  பேச்சுவார்த்தையில் ஈடு பட்டு பிரச்சனையை முடித்து வைத் தார். இதன்பின் பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியா மல் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர், ஊழியர்களை பழி வாங்கும் நோக்கில் அரசு மருத்துவ மனையில் மருந்தாளுநராக பணி யாற்றும் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் எம்.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில துணைத்தலைவர் நல்லம்மாள், மாவட்டத் தலைவர்  கார்த்தி, செய லாளர் செல்வராணி, பொருளாளர் தன லட்சுமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டக்குழு மற்றும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் இச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், அனை வர் மீதும் எடுக்கப்பட பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தொடர்ந்து ஊழியர் விரோத போக்குடன் செயல்படும் மருத்துவக் கல்லூரி முதல்வரை பணி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்து வக்கல்லூரி மருத்துவமனை வளா கத்தில் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் எம்.சுப்பிர மணியன், மாவட்ட செயலாளர் சக்தி வேல், மாவட்ட தலைவர் மகாவிஷ் ணன், பொருளாளர் பொன்ஜெயராம், செவிலியர் சங்க மாநில துணை தலை வர் நல்லம்மாள் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில் நூற்றுக் கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள், செவிலியர்கள் கலந்து கொண் டனர்.