tamilnadu

விபத்து வழக்கில்  ஜாமீனில் விட லஞ்சம் கேட்ட காவலர் கைது

 கரூர், பிப்.27-  கடந்த 16-ம் தேதி கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே தவுட்டுப்பாளையத்தில் புலியூரை சேர்ந்த மகாமுனி ஓட்டி வந்த காரும், சேலம் எருமப்பட்டி எம்.எஸ் நகரை சேர்ந்த டிரைவர் ராஜசேகரன் (24) ஓட்டி வந்த காரும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மகாமுனியின் மனைவி மாணிக்கவல்லி இறந்தார்.  இது தொடர்பான வழக்கில் டிரைவரான ராஜசேகரனை ஜாமீ னில் விட, கார் உரிமையாளரான சேலம் மாவட்டம், அன்னதானப் பட்டியை சேர்ந்த அபிஷேக் மாறன்(28) என்பவரிடம் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எழுத்தர் செந்தில்குமார் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள் ளார். இது குறித்து அபிஷேக்மா றன், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து புதன்கிழமை காலை வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் சென்ற அபி ஷேக்மாறன் ரசாயனம் தடவிய பணத்தை எழுத்தர் செந்தில்குமா ரிடம் கொடுத்தார்.  அதை அவர்  வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், செந்தில் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்சம் பண விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.