tamilnadu

சிஐடியு நிர்வாகிகளை அவமதித்த டாஸ்மாக் மேலாளர் கோரிக்கைகளை ஏற்றதால் போராட்டம் ஒத்தி வைப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர், மே 30- கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகில் உள்ள சரளப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா பேபி. சுரேஷ்குமாருக்கு  கடந்த 2019 ம் வருடம், நவம்பர் மாதம், 13ம் தேதி 4903 என்ற எண் கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடையில் விற்ப னையாளராக பணி செய்ய டாஸ்மாக் நிர்வாக  மாவட்ட மேலாளர்  உத்தரவிட்டுள் ளார். உத்தரவையடுத்து சுரேஷ்குமார் மது பான கடைக்கு விற்பனைக்கு சென்று தினசரி பணிப் பதிவேட்டில் கையெழுத்தி ட்டு பணி செய்து வந்துள்ளார். ஆனால் சுரேஷ்குமாரை விற்பனையாளராக பணி செய்ய விடாமல் உதவியாளராகவும், வாட்ச்மேன் போல வும் பணி செய்ய  வைத்துள்ளனர்.

அதே அரசு மதுபான கடையில் எவ்வித  உத்தரவுமின்றி, பணி நியமனமும் இன்றி, இரண்டு நபர்கள்  விற்பனையா ளராக பணி செய்து வருகின்றனர். சுரேஷ்குமார் கடந்த 26ஆம் தேதி வரை பணிப் பதிவேட்டில் கையெழுத்திட்டு பணி செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி காலை பணிப் பதிவேட்டில்  கையெ ழுத்திட செல்லும் பொழுது டாஸ்மாக் கடையின்  சூப்பர்வைசர், மாவட்ட மேலா ளர் சுரேஷ்குமாரை நேரில் சந்திக்க  வருமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடாதவாறு முடக்கி வைத்து விட்ட னர். இதனையடுத்து கடந்த புதன்கிழமை யன்று சுரேஷ்குமார் அவரது மனைவி ஆகியோர் புதன்கிழமையன்று நேரடி யாக டாஸ்மாக் நிர்வாக மாவட்ட மேலாளர்  விஜயசண்முகத்தை அவரது அலுவ லகத்தில் நேரில் சந்தித்த பொழுது, ஒருமையில் பேசி  வேலையை விட்டு நீக்கி விடுவேன் என்று சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவியை மேலாளர் இருவரையும் வெளியே அனுப்பி உள்ளார்.

எந்தவித காரணமும் கூறாமல் வெளியே அனுப்பி உள்ளார்.  மீண்டும் சிஐடியு மாவட்ட  செயலாளர் சி. முருகேசன் தலைமையில் டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் கா.கந்தசாமி மற்றும் சுரேஷ்குமார் அவரது மனைவி ஆகியோர் டாஸ்மாக் நிர்வாக மாவட்ட மேலாளரை சந்தித்து விளக்கம் கேட்க வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர். ஆனால் டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகம் சங்க மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க முடியாது என்று கூறி அனுப்பி விட்டார். இந்த செயலை சிஐடியு வன்மை யாக கண்டிப்பதுடன், தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசுவது அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வது இரு தரப்பிற்கு இடையில் ஒரு சுமூக நடவடிக்கை கடைபிடிக்க வழிவகை செய்யும் தொழிற்சங்க தலைவர்களை அவமதித்தது  பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட டாஸ்மாக் நிர்வாக மாவட்ட மேலாளர் விஜய சண்முகத்தின் மீது உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை வலியுறுத்தி மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு சனியன்று ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டக் குழு சார்பில்  தயாராகினர். அப்போது பசுபதிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தி ற்கு அனுமதி இல்லை என்று கூறி போராட்டம் நடத்த வேண்டாம் என்று கூறி விட்டனர். இதனையடுத்து உதவி ஆய்வாளர் நாகராஜ் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் சிஐடியு நிர்வாகிகளுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்திட ஏற்பாடு செய்ததின் மூலம் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்ட தையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.  சிஐடியு  மாவட்ட செயலாளர் சி.முரு கேசன், டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் கா.கந்தசாமி, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.தண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.