கரூர், ஜூலை 6- கொரோனா தடுப்பு பணியில் மரணமடைந்த வருவாய்த்துறை அலுவலர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்தபடி ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கரூர் மாவட்டக்குழு சார்பில் கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் சந்துரு தலைமை வகித்தார். சங்க மாநிலச் செயலாளர் எம்.எஸ்.அன்பழகன் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பொன்ஜெயராம் பேசினர்.