tamilnadu

img

நோயாளிகள் சிகிச்சைக்காக அரசு ஊழியர்கள் ரத்ததானம்

கரூர், மே 25- பல்வேறு நோய் தொற்று, அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை பெறும் நோயா ளிகளுக்கு ஊரடங்கு காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்குதடையின்றி இரத்தம் கிடைத்திட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழி லாளர்கள் உள்ளிட்டவர்களை ஒருங்கி ணைத்து இரத்த தானம் வழங்கும் சிறப்பு முகாமினை நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு  சார்பில் இரத்த தான முகாம் கரூர் அரசு ஊழியர் சங்க மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மு.சுப்பிர மணியம் தலைமை வகித்தார். செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன்  முகாமினை தொடங்கி வைத்து பேசினர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரணிராஜன் முகாமை வாழ்த்திப் பேசினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட துணை தலைவர் வி.கணேசன், வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் ஐ.வெங்கடேசன், சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம், அஞ்சல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜெ.ஜெயராஜ், பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மலைக் கொழுந்தன், ஆய்வக நுட்பனர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.செல்வராணி, ஆகியோர் பேசினார்.  முகாமில் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள், சிஐடியு மற்றும் டிஎன்பிஎல் ஊழி யர்கள் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வலர்க ளும்  கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி னர்.