tamilnadu

img

கரூர் தொகுதியில் ஜோதிமணி வெற்றி உறுதி! கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர், புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணனை நேரில் சந்தித்தனர். கட்சியின் கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, கரூர்தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் சிறந்த சமூக செயற்பாட்டாளருமான ஜோதிமணி வெற்றி உறுதி என்றும், அவரது வெற்றிக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் தங்களது உழைப்பினை அர்ப்பணிப்பார்கள் என்றும் கூறி கே.பாலகிருஷ்ணன், ஜோதிமணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, கே.பாலகிருஷணனுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சின்னசாமி, காங்கிரஸ் கரூர்தொகுதி பொறுப்பாளர் மகேஷ்குமார், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரத்தீஷ் கிருஷ்ணா, மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் முருகானந்தம், மாவட்ட

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நவீன்குமார், பிரேம்குமார், திமுக பரமத்தி ஒன்றியச் செயலாளர் கே.கருணாநிதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பி

னர்கள் எம்.தண்டபாணி, எஸ்.ஜீவானந்தம் உள்ளிட்டோ பங்கேற்றனர்.

;