tamilnadu

img

தரகம்பட்டியில் புதிய நீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தல்

கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா, மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது. இந்த பகுதி மக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமென்றால், குளித்தலை நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும். குளித்தலை செல்வதற்கு பேருந்து வசதிகள் இல்லை. இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான கடவூர் தாலுகாவை தலைமை இடமாக கொண்டு தரகம்பட்டியில் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். அது தற்போது அமையவுள்ள  நீதிமன்றம் கிருஷ்ணாபுரத்தில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அப்படி அமைந்தால் கடவூர் தாலுகா பகுதி மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு தரகம்பட்டியில் புதிய நீதிமன்றம் அமைத்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை மனுவை மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம், கடவூர் பகுதி பொதுமக்கள் சார்பில், கடவூர் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி தலைமையில் கோரிக்கை மனுவை வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, கடவூர் வட்ட செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.