கரூர், ஆக.1- குளித்தலை நகராட்சி யில் அரசு நிதி ரூ.1 கோ டியை மோசடி செய்த 6 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் குளித்த லை நகராட்சியில் கடந்த 2019 - 20 ஆம் ஆண்டு வளர்ச்சி பணிகள் திட்டத்தின் நிதி செலவு செய்யப்பட்டது குறித்து கடந்த 10 நாட்க ளாக வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. ஆய்வில் தணிக்கை அதி காரிகள் பல்வேறு கணக்கு களை ஆய்வு செய்ததில் பல்வேறு மோசடி நடந்துள்ள தாக கூறியதை தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாக அக்க வுண்ட் ஆடிட் உதவி இயக்கு னர் அசோக்குமார், குளித்தலை நகராட்சியில் அதிகாரிகளை விசாரணை செய்து தணிக்கை மேற்கொ ண்டார். அதில், நகராட்சியில் அக்கவுண்டன்ட் ஆக பணி யாற்றும் சத்யா ரூ.1 கோடிக்கு மேலாக அரசு ஆவண ங்களை திருத்தி அரசு நிதி களான சிபிஎஸ், பிஎஃப், நக ராட்சி நிர்வாக நிதி போன்ற வற்றில் உள்ள பணத்தை சிபி, பாலமுருகன், எல்.பாலாஜி, ஆர்.சுப்பிரமணி, எஸ். சுப்பிரமணி ஆகிய பெயர்க ளில் செக் மூலம் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
அவர் மீது நடவ டிக்கை எடுக்குமாறு நகரா ட்சி ஆணையர் மோகன்கு மார் கரூர் குற்றப்பிரிவில் கொடுத்த புகாரை தொ டர்ந்து, கரூர் மாவட்ட குற்ற ப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் ரேணுகாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னை யில் நகராட்சி நிர்வாக ஆணைய தலைவராக பணியாற்றிவரும் பாஸ்கரன், தற்போது கணக்கராக பணியாற்றிவரும் சத்யா, முன்னாள் ஆணையர் பொ றுப்பில் இருந்த புகழேந்தி, கார்த்திகேயன், தற்போது உள்ள ஆணையர் மோக ன்குமார் மற்றும் அலுவ லர்கள் சரவணன், யசோதா தேவி ஆகிய 6 பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.