tamilnadu

img

ஓட்டுநர் உரிமம் இல்லாதவர் இயக்கும் ஆம்புலன்ஸ் உரிமம் ரத்து செய்யப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

கரூர், அக்.23- உயிர்க்காக்கப் பயன்படும் ஆம்பு லன்சுகள் முறையாக அனுமதி பெறா மல், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர் களால் இயக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள் ளார். கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயங் கும் 108 அவசரகால ஊர்தி மற்றும் தனியார் அவசரகால ஊர்திகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட் டம் மற்றும் மருத்துவமனைகளுக்கான தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி ஆகி யவை போக்குவரத்துத்துறை அமைச் சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை யில், மாவட்ட ஆட்சித்தலைவர் த. அன்பழகன் முன்னிலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது: நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களின் போது உயிர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒப்பற்ற பணி யை செய்யக்கூடியவர்கள் அவசரகால ஊர்தி ஓட்டுநர்கள். ஆனால், ஒரு சிலர் அவர்கள் பணியின் முக்கியத்து வத்தை உணராமல் செயல்பட்டு வரு கின்றார்கள். ஒரு அவசரகால ஊர்தி என்னென்ன வசதிகளுடன் இருக்க வேண்டும் என்ற விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்படா மல் இருக்கும் ஆம்புலன்சுகள் ஆய்வுக்குட்படுத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் இயக்கப் படும் ஆம்புலன்சுகள் மற்றும் தனி யார் ஆம்புலன்சுகள் அரசின் விதி களுக்குட்பட்டு இயக்கப்படுகின்றதா என்பது குறித்து வட்டாரப்போக்கு வரத்துத்து அலுவலர் மற்றும் போக்கு வரத்து காவலர்கள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். உரிய விதிகளை பின்பற்றாத ஆம்பு லன்சுகளின் உரிமம் ரத்து செய்யப் படும். மேலும், முறையான முன் அனு பவம் இல்லாத, ஓட்டுநர் உரிமம் இல்லாத ஓட்டுநர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாக னத்தில் ஆட்களே இல்லாத நிலை யிலும், தேவையற்ற நேரங்களிலும் அவசரகாலத்தில் பன்படுத்தக்கூடிய ஒலிப்பான்களை இயக்கியவாறு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்க ளின் ஓட்டுநகர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், சில தனியார் மருத்துவ மனைகளோடு ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் தொடர்பு வைத்துக்கொண்டு, ஆபத்தான நிலையில் வாகனத்தில் இருக்கும் நபர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லாமல், சில குறிப்பிட்ட மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும. தங்கள் பணியின் முக்கியத்துவத்தை ஆம்பு லன்ஸ் ஓட்டுநர்களும், மருத்துவமனை களும் உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக கரூர் மாவட்டத்தில் உள்ள 15 அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவ ஸ்தாபன சட்டத்தின் கீழ் தரச்சான்று களை போக்குவரத்துத்துறை அமைச் சர் வழங்கினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டி யராஜன், குளித்தலைவ சார் ஆட்சி யர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான்.., அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.ரோஸிவெண்ணிலா, சுகாதா ரத்துறை இணை இயக்குநர் மரு.பாக்கி யலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வ சுரபி உள்ளிட்ட அலுவலர்கள் உடனி ருந்தனர்.