tamilnadu

அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகையை  கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

 குளித்தலை, ஜன.19- கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச் சாவடியில் சனிக்கிழமை மாலை திருச்சியிலிருந்து கரூர் வழியாக ஈரோட்டிற்கு கட்சி நிகழ்ச்சிக்கு செல்லும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாலபாரதியிடம் கட்டண வசூலின் போது சுங்கச்சாவடி ஊழி யர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.  சுங்கச்சாவடி ஊழியர்களின் அராஜக செயலை கண்டித்து அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்ட நிலை யில் தினமலர் பத்திரிகையில் மட்டும் பாலபாரதியின் பெய ருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளனர்.  இதனை கண்டித்து கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பி னர் இரா.முத்துச்செல்வன் தலைமையில் போராட்டம் ஞாயி றன்று நடைபெற்றது.

;