கரூர்: கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேதியியல் துறை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு, வேதியியல் துறை தலைவர் சீனி வாசன் தலைமை வகித்தார். பேராசி ரியர்கள் ராஜதுரை, தீபா முன்னிலை வகித்தனர். முகாமில் கல்லூரி முதல்வர்(பொ) ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பு குறித்து பேசி னார். பேராசிரியர் ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.