tamilnadu

img

தோழர் எம்.ராஜசேகரன் படத்திறப்பு

கரூர், ஏப்.22-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டிஎன்பிஎல் காகித ஆலை கிளை நிர்வாகி எம்.ராஜசேகரன் படத்திறப்பு, புகழஞ்சலி கூட்டம் புகளூர் நான்கு ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் திங்களன்று கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், தோழர் ராஜசேகரன் உருவப் படத்தை திறந்து வைத்து பேசியதாவது, தோழர் ராஜசேகரன் இளைஞராக இருந்தபோதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், தொழிற்சங்கங்களிலும் சேர்ந்து தனது பணியை மேற்கொண்டார். கட்சியில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவரது இழப்பு என்பது கட்சிக்கு பேரிழப்பாகும். நாமும் அவரது பாதையில் அவர் விட்டு சென்ற பணியை செய்து கட்சியை வளர்க்க வேண்டும். மேலும் அவரது குடும்பம் கட்சி குடும்பம் கட்சியை நம்பி கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்த குடும்பம் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது நமது கட்சியின் கடமை அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் என்றார். கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஜோதிபாசு, சி.முருகேசன் ஆகியோர் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் அ.காதர்பாட்ஷா, ஆர்.ஹோச்சுமின், கரூர் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குணசேகரன், கந்தசாமி, டிஎன்பிஎல் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ராமசுப்பு, தர்மலிங்கம், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;