tamilnadu

வீணாகக் கடலில் கலப்பதை தவிர்த்து ஏரி, குளங்களில் காவிரி நீரை நிரப்புக! சிபிஎம் கரூர் மாவட்டக் குழு வலியுறுத்தல்

கரூர், அக்.8- காவிரியிலிருந்து கரூரில் உள்ள ஏரி, குளங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பி அதன் மூலம் குடிநீர், விவசாயத்தை மேம்படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப் பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநி லக் குழு முடிவுகள் குறித்து பேசி னார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் கே. கந்தசாமி ஆகியோர் எதிர்காலப் பணிகள் குறித்து பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், பி.ராஜு, பி. இலக்குவன், எம்.ஜோதிபாசு, சி. முருகேசன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். காவிரி ஆற்றில் வெள்ளக் காலங்களில் தண்ணீர் சேமிக்க முடி யாமல் உபரியாக லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் கடலில் வீணாக கலந்து விடுகிறது, இதனால் கரூர் மாவட்டத்தில் கோடை காலங்கள், மழை இல்லாத காலங்களில் வறண்ட மாவட்டமாக மாறி விடு கிறது. இதனால் விவசாயம் முற்றி லும் செய்ய முடியாத சூழல் ஏற் பட்டுள்ளது. மேலும் தோகைமலை ஒன்றியம், கடவூர் வட்டம், கிருஷ்ண ராயபுரம் ஒன்றியத்தில் பஞ்சப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக வறண்ட தரிசு நிலங் களாகவும் உள்ளது.  மேலும் மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பல் வேறு இன்னல்களுக்கு ஆளாகின்ற னர். இவர்களின் துயரங்களை போக்கிடவும், மாவட்டம் முழுவதும் விவசாயம், குடிநீர் தடையின்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுத்திட வேண்டும். மழைக் காலங்களில் காவிரி ஆற் றில் வரும் தண்ணீரை கரூர் மாவட் டத்தில் தடுப்பணைகள் கட்டி அதன் மூலம் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.  மாயனூர் தடுப்பணையில் இருந்து கிருஷ்ணாபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டி ஏரி, சிவாயம் குளம், கடவூர் வட்டம், மாவத்தூர் ஏரி, தாந்தோணி ஒன்றியம், வெள்ளி யணை பெரிய குளம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள பல்வேறு ஏரி, குளங்களிலும், க.பரமத்தி ஒன்றியம், தாதம்பட்டி ஏரியிலும் காவிரியில் வரும் உபரி நீரை குழாய் மூலம் எடுத்துச் சென்று மேற் கண்ட ஏரி, குளங்களை நிரப்பி அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக் கான விவசாய நிலங்களையும், மக்களின் குடிநீர் ஆதாரங்களை யும் பாதுகாத்திட கரூர் மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.