கரூர், ஆக.1- கரூர் மாவட்டம் வெங்கமேடு, கொங்கு நகரில் வசிப்பவர் செல்வம். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்க ளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவ ர்கள் இருவரும் தினம்தோறும் காய்கள், கீரை உள்ளிட்டவைகளை சிறிய அள வில் சைக்கிளில் வைத்து விற்பனை செய்து, அதன் மூலம் வரும் வருமா னத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து வெங்கமேடு, எம்.ஜி.ஆர் சிலை அருகில் வியாபாரம் செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் சிலை அருகில் சாலையோரத்தில் சைக்கிளில் நின்று கீரை வியாபாரம் செய்து வந்த போது, நகராட்சி ஆய்வாளர் பழனி ச்சாமி, மேற்பார்வையாளர் சிக்கன்ணன் ஆகியோர் வந்துள்ளனர். இருவரும், குறிப்பாக அவர்களி டம் சென்று இந்த இடத்தில் வியாபாரம் செய்யக் கூடாது, உடனடியாக எடுத்துச் செல்லுமாறு கூறி உள்ளனர்.
வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது கடையை எடுப்பதற்கு சிறிது நேரம் ஆகிவிட்டதால், இன்னும் எடுக்கவில்லையா என்று கூறி தகாத வார்த்தையில் திட்டி, ராஜேஸ்வரியை தாக்கியுள்ளனர். இதனை கண்டித்தும், வியாபாரி களை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி யும் கரூர் மாவட்ட தரைக்கடை, தள்ளு வண்டி தொழிலாளர் சங்கத்தின் (சிஐ டியு) சார்பில் வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டச் செய லாளர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். சிபிஎம் நகரச் செயலாளர் எம். ஜோதிபாசு, சிஐடியு மாவட்டச் செயலா ளர் சி.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.