கரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் து.ரா.பெரியதம்பி மறைவிற்கு டாக்டர் செளந்திரவல்லி குழந்தைசாமி தனது ஆழ்ந்த இரங்கல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து டாக்டர் சௌந்தரவல்லி குழந்தைசாமி தனது இரங்கல் செய்தியில், மூத்த தோழர் பெரியதம்பி மறைவுற்ற செய்தி எங்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி விட்டது. வாழ்நாள் முழுவதும் பொதுத் தொண்டு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கா கவே வாழ்ந்தவர். எந்தவிதக் கைமாறும் எதிர்பாராது தம்மிடம் உதவி கேட்டு வந்தவருக்கெல்லாம் உடல் பொருள் சிரமம் பாராது உழைத்தவர். அவரது மறைவிற்குக் கண்டிப்பாக நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டும். அடுத்தடுத்து கண் அறுவைச் சிகிச்சை நடைபெற்றதா லும், இன்று மியாட் மருத்துவமனையில் சிறு சிகிச்சை மேற்கொண்டதாலும் என்னால் நேரில் வர இயலவில்லை. தயவுகூர்ந்து மன்னித்து அருள வேண்டுகிறேன். அன்னார் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.