நாகர்கோவில், ஆக.12- கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த் வட நேரேவிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அளித்த மனுவில், கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு வெளியே இருந்து வரும் மக்களை மாவட்ட எல்லையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி முடிவு வரும் வரை தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அதற்கென மாவட்டத்திலுள்ள பல கல்லூரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல நேரங்களில் கல்லூரிகளில் இடமில்லை என்று கூறி கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்படு கின்றனர். இந்த விடுதி அறை கட்டணம், உணவுக்கான தொகையும் அவர்களிடமே வசூலிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கப்படுகி றார்கள். மேலும் தங்கும் விடுதி அறை பில் கேட்ட காரணத்தால் ஒரு நபரை தொற்று உறுதி என்று பொய் கூறி அந்த நபரை மன தளவில் துன்புறுத்தி மறுநாள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். எனவே, கொரோனா நடவடிக்கையை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடு வோர் மற்றும் அதிகாரிகள் மீது ஆட்சியர் நேரடியாகத் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள் ளது. இந்த மனுவை வாலிபர் சங்க குமரி மாவட்ட செயலாளர் எட்வின் பிறைட், பொரு ளாளர் வி.ரெதீஸ், நிர்வாகிகள் விஜி, பிரவீன் ஆகியோர் ஆட்சியரிடம் அளித்தனர்.