நாகர்கோவில், ஜூன் 18- குமரி மாவட்டத்திற்குள் கோவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளாமல் குறுக்கு வழிகளில் நுழைபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிர சாந்த் வடநேரே எச்சரிக்கை விடுத்துள் ளார். இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குமரி மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி மதியம் சுமார் இரண்டு மணிக்கு என்ட் டூ எண்ட் அரசு பேருந்தில் வந்த பயணிகளை பரிசோதனை செய்ததில் ஒரு நபருக்கு கோவிட் 19 தொற்று இருந் தது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை செய்ததில் சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்து பின்னர் அரசு பேருந்து மூலமாக நாகர்கோவில் வந்தது தெரியவந்தது. இதனால் அவருடன் பேருந்தில் பயணம் செய்த 40 பேருக்கும் பரி சோதனை செய்யப்பட்டு வீட்டு தனி மைபடுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே பேருந்தில் பயணம் செய்யும்போது மக்கள் அலட்சியமாக இல்லாமல் முறையாக சமூக இடை வெளியை பின்பற்றுவதோடு முககவ சம் அணிவது, சானிடைசர் பயன்படுத்து வது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை களை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் சோதனை சாவடிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களில் ஆவணங்கள் தணிக்கை செய்யப்பட்டு சளி மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நடைமுறைகளை தவிர்க்கும் வகையில் ஒரு சில குறுக்கு வழிகளில் மாவட்டத்திற்குள் நுழைய முயற்சிக்கின் றனர். இவ்வாறு குறுக்கு வழிகளில் நுழை பவர்கள் மீது மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. எனவே பொது மக்கள் தங்கள் பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து யாரேனும் வருகை தந்துள்ளதாக தெரியவந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலை பேசி எண் 1077 தொடர்பு கொண்டு தக வல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள். இவ்வாறு தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என அந்த செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.