tamilnadu

ரயில் தண்டவாளத்தில் மண்சரிவு பள்ளியாடி அருகே ரயில்கள் நிறுத்தம்

நாகர்கோவில், ஜூன் 8- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில்  பள்ளியாடி அருகே தெங்கன்குழியில் தாழ்வான இடத்தில் தண்ட வாளம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தண்டவாளத்தின் இரு பக்கமும் உயரமான மண் பகுதி என்பதால் இங்கு தொடர் மழை பெய்யும் காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்ட  வாளம் மண்ணால் மூடப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது உண்டு.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஞாயிறன்று நள்ளிரவு மண் சரிந்து தண்ட வாளத்தில் விழுந்தது. இதனால் திங்களன்று காலை  திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் சரக்கு ரயில் மற்றும் ரயில்வே பணிக்காக தொழிலா ளர்கள் செல்லும் ரயிலும் வழியிலேயே நிறுத்தப்பட்டன.  தண்டவாளத்தை மூடியுள்ள மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு காரணமாக  திருவனந்தபுரம் நாகர்கோவில் இடையே பயணிகளுக்கான ரயில் போக்குவரத்து இல்லாததால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

;