tamilnadu

வெளிமாநில தொழிலாளியின் சடலம் அஞ்சுகிராமம் அருகே கிணற்றிலிருந்து மீட்பு

நாகர்கோவில், ஜூன் 21- கன்னியாகுமரி மாவ ட்டம் நாகர்கோவில் பகுதி யில் இயங்கி வரும் பிரபல  தனியார் நட்சத்திர விடுதி  (விஜயதா) உரிமையாள ருக்கு சொந்தமான தென்னை  தோப்பு அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு பகுதி யில் உள்ளது.  இங்கு வட  மாநிலத்தை   சேர்ந்த ஆறு பேர் தொழி லாளிகளாக  பணிபுரிந்து வரு கின்றனர். இவர்கள் தங்குவதற்கு தோப்பின் உள்ளேயே வீடு கட்டி கொ டுக்கப்பட்டுள்ளது.  இந்நிலை யில் இவர்களில் ஒரு தொழி லாளியான  பிகார் மாநி லத்தை சேர்ந்த  அருண்குமார் (18) என்பவர்  தோப்பில் இருந்த கிணற்றில் சடலமாக  மிதந்தார். அருண் குமாரின் உடலை  கிணற்றில் இருந்து மீட்க சக வட மாநில தொழிலாளிகள் முயற்சி செய்தும் முடிய வில்லை. இதனால் தீய ணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு துறையினர் உடலை  கிணற்றில் இருந்து மீட்டனர். அருண் குமார்  உடலை கூராய்வுக்கு அனுப்பிய அஞ்சுகிராமம் காவல் துறை யினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

;