நாகர்கோவில், ஜுன் 13- புகார் அளிக்க வந்த பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணி ஆக்கியதோடு சட்ட விரோத கட்டாய கருக்கலைப்புக்கும் உள்ளாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் மீது பாலியல் வன்கொ டுமை வழக்கு பதிந்து கைது செய்ய வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாள ராக பணியாற்றியவர் சுந்தரலிங்கம். மேய்க்கோடு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒரு புகார் தொடர்பாக காவல் நிலையம் சென்றுள்ளார். அவரிடம் நெருக்கமாக பழகியதுடன் தான் வசித்த வீட்டின் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த பெண்ணை தங்க வைத்துள்ளார். அவர்களது நெ ருக்கத்தால் அந்த பெண் கர்ப்பம டைந்துள்ளார். கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக என்று அந்த பெண்ணை தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து காரில் அழைத்து வந்த சுந்தரலிங்கம் திருவட்டார் அரு கில் உள்ள புலியிறங்கியில் செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா லேபரட்டரியில் வைத்து கருக்கலைப்பு செய்ய முயன் றுள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட பெண்ணை அக்கம்பக்கத்தி னர் மீட்டு திருவட்டார் காவல்துறையின ரிடம் ஒப்படைத்தனர். கடும் ரத்தப்போக் குடன் காணப்பட்ட அந்த பெண் கல்லுமாமூடு பகுதியில் உள்ள ஸ்நேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த பெண் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க தலை வர்களை தொடர்பு கொண்டார். இதை அறிந்துகொண்ட சுந்தரலிங்கம் தனது கூட்டாளிகள் மூலம் மருத்துவமனைக்கு நெருக்கடி கொடுத்து அங்கிருந்து அந்த பெண்ணை வெளியேற்ற முயன்றுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஸ்ரீநாத்தி டம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணை செயலர் உஷாபாசி புகார் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த பெண் போலீஸ் பாதுகாப்புடன் அங்கேயை சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே தக்கலை டிஎஸ்பி தலைமையில் நடத்தப்பட்ட விசார ணையின் அடிப்படையில் சுந்தரலிங்கம் சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அந்த பெண்ணின் செல்பேசியில் உள்ள ஆதா ரங்கள் போன்றவற்றை அழித்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் சுந்தரலிங்கம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுந்தரலிங்கம் மீது பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்ய வேண்டும். காசி மீதான பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றவும் குழந்தை கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் வலியுறுத்தி மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு சனியன்று அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேங்காப்பட்டணத்தில் 10 வயது சிறு மியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக் கிய வயது முதிர்ந்த 7 கயவர்கள் மீதும் ஜாமீனில் வெளி வர முடியாமல் கடுமை யான நடவடிக்கை எடுக்கக் கோரியும், பரக்குன்று, மருதங்கோடு பகுதிகளில் 4 வயது, 8 வயது, 11 வயது பச்சிளம் குழந்தைகளை பாலியல் வன்மு றைக்கு உள்ளாக்கிய கயவர்கள் மீது உடனடியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் துணைத்தலைவர் ஏ.எம். வி.டெல்பின் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் ஆர். லீமாரோஸ், மாநில துணை செயலர் என். உஷா பாசி, மாவட்டச் செயலாளர் எம்.ரெகு பதி, பொருளாளர் சாரதாபாய், மாவட் டக்குழு உறுப்பினர்கள் விஜயா, சுக லஜா மற்றும் பலர் கலந்து கொண்ட னர். அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.