tamilnadu

img

டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு ஊரடங்கு கால நிவாரணம் கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மே 7- கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தனிமனித இடைவெளியுடன்கூடிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொரோனா நிவாரணத்துக்காக தமிழக அரசு கோரிய நிதியை வழங்க வேண்டும். கொரோனா கால நிவாரணமாக ரூ.5000 அனைவருக்கும் வழங்க வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தனிமனித இடைவெளி பராமரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், உஷா பாஸி உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர். நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, குலசேகரம், அருமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கறுப்பு பட்டை அணிந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.