நாகர்கோவில், மே 11- கொரோனா பணிக்காக தேர்ந்தெ டுக்கப்பட்ட 2570 தற்காலிக செவிலியர் களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் சுபின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அரசு பன்முக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் 530 மருத்துவர் 2323 செவிலியர்கள் 1508 ஆய்வக நுட்பு னர்கள் மற்றும் 215 சுகாதார ஆய்வா ளர்கள் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வரும் நிலையில் ஆறு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2570 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப் படுவதற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கி றது.
அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை சேவை மேம்படும் என் பது குறிப்பிடத்தக்கது. செவிலியர்களின் உன்னதமான பணி இந்த சமூகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக கொரோணா சிகிச்சையின்போது தங்க ளுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்தும், செவிலி யர்கள் தங்கள் உயிரை கூட பெரிதாக எண்ணாமல் கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை செய்து கொண்டிருக் கின்ற நிலையில், சிகிச்சைக்காக தற்காலி கமாக நியமிக்கப்பட்ட இந்த செவிலி யர்கள், வெறும் ஆறு மாத காலம் மட்டுமே பணியில் இருப்பார்கள் என்றும் அவர்கள் பணி நிரந்தரம் கோரமுடியாது என்றும் தெரிந்தும், அரசு உத்தரவுக்கு இணங்க 3 நாட்களுக்குள் பணியில் ஆர்வமுடன் இணைவது செவிலியர்களின் தன்னல மற்ற சேவையை எடுத்துக் காட்டுகிறது.
மேலும் இந்த செவிலியர்கள் மக்கள் சேவையை பெரிதாக எண்ணி தாங்கள் தற்போது பணி செய்துகொண்டிருக்கும் மருத்துவமனை பணியை விட்டு விட்டு 3 நாட்களில் பணியில் இணைய வேண்டும் என்ற அரசின் உத்தரவை ஏற்று பணி யில் இணையும் நிலையில் ஆறு மாதத்திற்கு பின்பு அவர்களை பணியை விட்டு நீக்கினால் அவர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படும். மேலும் அவர்கள் புதிய பணியை தேடுவது என்பது மிக வும் சிரமமாக இருக்கும். உயிருக்கு உத்த ரவாதம் இல்லாத நிலையிலும் சமூ கத்திற்கு சேவை செய்ய ஆர்வமாக இருக்கும் இந்த செவிலியர்களின் சேவை மனப்பான்மையை தங்கள் அரசு புரிந்து கொண்டு செவிலியர்களை தற்காலிக மாக பணி அமர்த்தாமல் அவர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது.