நாகர்கோவில், ஆக.6- குமரி மாவட்ட மலைப்பகுதி களில் புதிய கட்டுமானங்களுக்கு அறிவிக்கப்படாத தடையை வனத் துறையினர் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதார உரிமை பறிக்கப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் பேச்சிப் பாறை அருகே கோதையாறு, குற்றியார் உட்பட்ட 6 மலையோர கிராமங்களில் பத்தாயிரத்துக் கும் மேற்பட்ட மலைவாழ் மக் கள் வசித்து வருகின்றனர். அரசு அறிவித்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்க ளுக்கு கழிவறை கட்டுவதற்காக பேச்சிப் பாறை ஊராட்சியிலி ருந்து கட்டுமான பொருட்களை வாகனத்தில் கொண்டு சென்ற னர். இந்த வாகனத்தை சீறோ பாயின்ட் வன சோதனை சாவடி யில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த வாக னத்தை மலை கிராமங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மலைவாழ் மக்கள் வனத்துறை சோதனை சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த அருமனை காவல்துறை யினர் மலைவாழ்மக்களிடமும், வனத்துறையினரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கினர். களக்காடு முண்டன்துறை புலி கள் சரணாலயம் விரிவாக்கம், அதையொட்டிய சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் போன்றவற்றால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரி கள் முதல் அமைச்சர் வரை கூறி னர். ஆனால் வனத்துறையினர் பல்வேறு வகையில் மலைப்பகுதி மக்களின் வாழ்வுரிமையை படிப் படியாக பறித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த சில தினங்க ளுக்கு முன்பு தடிக்காரன் கோணத்திலிருந்து கீரிப்பா றைக்கு கட்டுமான பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனத்தையும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தி னர். இவை மக்களது குற்றச்சாட்டு களுக்கு சாட்சியமாக உள்ளன.