நாகர்கோவில், ஆக.5- கொரோனா ஊரடங்கு காலத்தில் பேருந்து வசதி இல்லாமல் பணிக்கு வர இயலாத தொழிலாளர்களுக்கு பிழைப்பு ஊதியமும், பேருந்து வசதி இல்லாமல் பணிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு முழு ஊதியமும் வழங்குமாறு தொழிற்சங்க கூட்டு நட வடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆட்சியர் பிரசாந்த் வடநேரே விடம் புதனன்று அளித்த மனுவில்: கொ ரோனா ஊரடங்கு காரணமாக ஆலை இயங்காத நாட்களில் பணிபுரிந்த டெக்னி சியன், எலக்ட்டீரிசியன், தூய்மை பணியா ளர், காவல் ஊழியர், அலுவலக பணியா ளர் ஆகியோருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கு மற்றும் போக்குவரத்து வசதியில்லாமல் ஆலை இயங்கிய மே மாதத்தில் குறைந்தபட் சம் 12 நாட்கள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை புகுத்தி மே மாதத்தில் ஆலை இயங்காத 9 நாட்க ளுக்கான சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே 12 நாட்கள் என்ற நிபந்தனையை கைவிட்டு மேற்படி 9 நாட்களுக்கான ஊதியத்தை உடனடி யாக வழங்க வேண்டும் உள்ளிட்டவை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த மனுவை, சிஐடியு பஞ்சாலை தொழி லாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சக்திவேல், தொமுச பொதுச்செயலாளர் மகாராஜபிள்ளை, சிஐடியு மாநிலகுழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, பிஎம்எஸ் பொ துச்செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.