tamilnadu

img

புதிய பாலப் பணி திடீரென நிறுத்தப்பட்டதால் மக்கள் முற்றுகை

நாகர்கோவில், ஆக.12- குமரன்குடி, தோட்டுகரை பகு தியில் மக்கள் போக்குவரத்திற் காக பயன்படுத்தி வந்த பாலம் பழுதடைந்து நிலையில் காணப் பட்டது. ஆபத்தான இந்த பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி பலமுறை போராட்டம் நடத்தியது.  இந்த போராட்டங்களின் விளை வாக புதிய பாலம் கட்ட நிதி ஒதுக் கப்பட்டு பாலம் பணி துவங்கியது. இந்நிலையில் திடீரென பாலப் பணி நிறுத்தப்பட்டு தளவாட பொருள்கள் அனைத்தையும்  ஒப்பந்தக்காரர் லாரியில் ஏற்றி கொண்டு செல்ல முயற்சித்தார்.  இதைதொடர்ந்து ஊர்மக்க ளும், மார்க்சிஸ்ட் கட்சியினரும் பாலப் பணிக்கான பொருள்களை கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், மார்க் சிஸ்ட் கட்சியினரிடமும், பொது மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பாலம் கட்டும் வேலை நிறுத்தப்பட்ட நிலையில் 10 நாட்களுக்குள் மீண்டும் துவங் கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்கா லிகமாக ஒத்திவைக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் அண்ணாதுரை, வட்டாரச் செயலாளர் வில்சன்,  விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரவி, விவசாயிகள் சங்க வட்டாரச் செயலாளர் தங்கராஜ்,  கிளை செயலாளர் சசிகுமார், கூட் டுறவு சங்க தலைவர் சுந்தரராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை யில் கலந்து கொண்டனர்.