நாகர்கோவில், ஜுன் 11- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கார்ப்ப ரேட்டுகளுக்கு சாதகமாக வேடந் தாங்கல் பறவைகள் சரணாலய நிலப்பரப்பை வரையறை செய்யும் வனத்துறை, குமரி மாவட்டத்தில் ஆறுகாணி முதல் ஆரல்வாய்மொழி வரை மக்கள் வசிப்பிடங்களையும் விளைநிலங்களையும் உள்ளடக் கிய பகுதிகளை புலிகள் சரணால யத்தின் பெயரால் தங்களது கட்டுப் பாடுக்கு கொண்டு வர முயற்சிப் பதை கைவிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சி செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது: நெல்லை மாவட்டத்தின் களக் காடு- முண்டன்துறை புலிகள் சரணா லயத்தை மக்கள் அடர்த்தியும், விளை நிலங்கள் அதிக அளவிலும் உள்ள குமரி மாவட்டத்துக்கு விரிவு படுத்தி யது வனத்துறை. குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்தது என்பது போல புலிகள் சரணாலயத்துக்கு வெளியே 3 கி.மீ சுற்றளவுக்கு வன விலங்குகள் நடமாடுவதற்கான பாது காக்கப்பட்ட பகுதியாக அறிவித்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டது.
அதற்கு எதிராக சிபிஎம் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும், விவசாயிகள் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத் தின. அப்போது, குமரி மாவட்ட வனப்பகுதியை புலிகள் சரணாலய மாக மாற்றுவது மத்திய அரசின் முடிவு என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். தற்போது காஞ்சிபுரம் மாவட் டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவை கள் சரணாலய பகுதியை பன்னாட்டு கார்ப்பரேட் இரசாயன தொழிற் சாலைகளுக்கு வழங்கி விதிமீறல் செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் அம்பலப் படுத்தி உள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பறவைகள் சர ணாலயத்தை பாதுகாக்க வலி யுறுத்தி மனு கொடுத்துள்ளனர். அவற் றுக்கு பதிலளிக்கும் வகையில் தலை மை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஏற்கனவே உள்ள 5 கி.மீ சுற்றளவு பறவைகள் சரணாலயத்தின் பகுதி கள் குறைக்கப்படாது’ என தெரி விக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 கி.மீ. வளைக்க முயற்சி
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே அவர்களாகவே புலிகள் சரணால யத்தின் பகுதியாக அறிவித்ததற்கு வெளியே 3 கி.மீ வரை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வனத்துறையினர் முயற்சி மேற் கொண்டுள்ளனர். அதற்கான முன்மொழிவுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியதுடன் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர். அதன்படி செங் கல்சூளைகள் போன்ற பாரம்பரிய தொழில்களைக்கூட தொடர முடியுமா என்கிற அச்சத்தை வனத்துறை யினர் ஏற்படுத்தி உள்ளனர். நில பரிவர்த்தனைகள் முடக்கி வைக்கப் பட்டுள்ளன. இதனால் தங்களது நிலங்களை மருத்துவம், திருமணம் போன்ற அவசர தேவைகளுக்கு விற்க முடியாமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். பழங்குடி மக்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாக்கப்படுகிறது. இவ்வாறு வனத்துறை விதிமுறை கள் காஞ்சிபுரத்தில் கார்ப்பரேட்டு களுக்கு உதவுவதும் குமரி மாவட்ட மக்களுக்கு எதிராக பயன்படுத்துவ தும் வனத்துறையின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்து கிறது. எனவே, வன கட்டுப்பாடுகளை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு விரிவுபடுத்தும் முடிவை வனத்துறை கைவிட வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.