நாகர்கோவில், ஆக.31- ஓணம் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் கேரள வியாபாரிகள் பூக்களை அதிகளவில் வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் திங்களன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் கொரோனா தடை உத்தரவு காரணமாக சிறப்பு பூச்சந்தை களை இழந்து காணப்பட்டது. கேரள வியாபாரிகளின் வருகை இல்லாததால் விற்பனை மந்தமாக காணப்பட்டதுடன் தோவாளை பூ வியாபாரிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமையில் குமரி மாவட்டத்தில் பொது ஊரடங்கை தளர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கேரள வியாபாரிகள் வந்து செல்வதற்கான தடையை தளர்த்த வேண்டும் என பூ வியாபாரிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வியாபாரம் நசிந்துள்ள நிலையில் ஓணம் பண்டிகை மலர் வியாபாரமும் நஷ்டமானதால் பூ வியாபாரிகள் கடும் வேதனையில் உள்ளனர்.