tamilnadu

கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண் படுகொலை

நாகர்கோவில், ஆக.6- குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் நீலாவதி (42). இவர் அப்பகுதி யில் உள்ள பேக்கரியில் உதவியாளராக வேலைபார்த்து வந்தார்.  நீலாவதிக்கு அவரது கணவர் ராம தாஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கார ணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக கண வரை பிரிந்து ஒரே மகனான அஜித்துடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், வியாழனன்று காலை நீலாவதியும் அவ ரது மகனும் வெகுநேரமாகியும் வீட்டிலி ருந்து வெளியே வராததால் பக்கத்து வீட்டி லுள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது நீலாவதி கழுத்தில் குத்து பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடல மாக காணப்பட்டார்.  இதுகுறித்து ஆசாரிபள்ளம் காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரி வித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடம் வந்த காவல் துறையினர் நீலாவதி யின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் மகன் இல்லாத நிலையில், யாரேனும் நள்ளி ரவில் புகுந்து கொலை செய்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் நீலாவதி யின் மகன் அஜித் மாயமான நிலையில் அவ ரையும் காவல் துறையினர் தேடி வருகின்ற னர்.