நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழி லாளர் சங்கம், பள்ளம்துறை பங்கு பேரவை மற்றும் ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி இணைந்து பள்ளம் பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்ஸ்.ஆல்ப் 30 மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பங்கு பணியாளர் சூசை ஆன்றணி தலைமை வகித்தார். மாவட்ட மீன் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அலெக் ஸாண்டர், பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, மருத்துவர் இமானுவேல் ஷரோன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 1000 குடும்பங்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.