tamilnadu

img

மழையில் இடிந்த வீட்டுக்கு நிவாரணம் அளிக்க கோரிக்கை

நாகர்கோவில், ஜூன் 8- குமரி மாவட்டம் வில்லுக்குறி  அருகே மழையின் காரணமாக  இடிந்த வீட்டிற்கு நிவாரணம்  கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோ ரிக்கை மனு அளிக்கப்பட்டது.  குமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம டைந்துள்ளது. பல்வேறு இடங் களில் பயிர் இழப்பும், வீடுகள் உள்ளிட்ட உடமைகள் சேதமும் ஏற்பட்டுள்ளன.  வில்லுக்குறி, குளு மைக்காடு பகுதியை சேர்ந்த தங்கநாடாச்சி என்பவர் பல தலைமுறைகளாக அந்த பகுதியில் அரசு நிலத்தில் குடியிருந்து வருகிறார். கடந்த 4  ஆம் தேதியன்று பெய்த அடைமழையில் அவர்களது வீடு இடிந்து விழுந்து விட்டது.  இதனால் அவர்களுக்கு அந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, துயர்துடைப்பு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் குமரி் மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி கூறுகையில், அரசு புறம்போக்கு  நிலத் தில் குடியிருப்பதால் நிவாரணம் வழங்கு வது சிரமம் என அதிகாரிகள் தெரிவித்ததாக  தகவல் வந்துள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.  நிலம் வரையறை செய்து பட்டா வழங்க வேண் டும். மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவார ணம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.