tamilnadu

img

பள்ளி மாணவர்கள் மீது கும்பல் தாக்குதல்   அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்கு

 குழித்துறை, செப்.22- பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியில் கல்லுபாலம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முன்பு மார்த்தாண்டம் குளப்பாறை வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்து தொடர்ந்து நிறுத்தா மல் செல்வதால் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வந்த னர். இது குறித்து சில மாணவர்கள் அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கேட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளி யன்று மாலை பள்ளி முடிந்து அந்த பேருந்தில் பள்ளியின் நிறுத்தத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் ஏறினர். அப்போது TN.74AF.2948 எண் கொண்ட இரு சக்கர வாகனம் பேருந்தை பின்தொடர்ந்து வந்துள்ளது. மற்றொரு வாகனத்தில் வந்த கும்பலுடன் இடைகோடு மருத்துவமனை சந்திப்பு நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது நடத்துநர் மற்றும் ஓட்டுநர் சேர்ந்து  மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதில் எட்டு மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளனர். இதில்படுகாயமடைந்த பிளஸ்-2 பயிலும் அபி (17), வைஷ்ணவ் (17), ஷாலு (17) ஆகியோர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் ஒருவர் இருதய நோய் உள்ளவர் என்பது குறிபிடத்தக்கது. இது குறித்து பளு கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசா ரணையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கூலிப்படையை ஏவி இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. பள்ளி மாணவர்களை கூலிப்படையை வைத்து தாக்கிய சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.