நாகர்கோவில், ஆக.17- இயற்கை சூழியல் பாதுகாப்புக்கு விரோதமாக ஒருபுறம் சூழியல் அதிர்வு மதிப்பீடு அறிக்கையில் கார்ப்பரேட்டு களுக்கு சாதகமான நகர்வை முன்வைக் கும் மத்திய அரசு வன உரிமைச்சட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதை பயன் படுத்தி குமரி மாவட்டத்தில் வனப்பகு தியை விரிவாக்கும் செய்து மக்களை வெளியேற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 46 காணி செட்டில்மெண்ட் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். பேச்சிப்பாறை, கோதையாறு, குற்றியார், கீரிப்பாறை உள்ளிட்ட வனத்துறைக்கு உட்பட்ட பகுதி களில் வசித்து வரும் இந்த மக்களின் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கண்டு கொள்ளாத நிலையே இருந்து வருகிறது. இப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தும் மத்திய மாநில அரசுகள் இது வரை செவிசாய்க்கவில்லை. மத்திய மாநில அரசுகள் இம்மக்களின் உரிமை களை கண்டுகொள்ளாத நிலையில் வனத்துறை அதிகாரிகளும் இம்மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியும், 2006 வனச்சட்டம் மலைவாழ் மக்க ளுக்கு அளித்துள்ள உரிமைகளை காலில் போட்டு நசுக்கியும் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டு வருகிறது.
மீறப்படும் வன உரிமைச் சட்டம்
ஏற்கனவே தனியார் வனக்காடுகள் சட்டம், வனவிலங்கு சரணாலயம், வன விலங்குகள் விவசாய நிலத்தை அழித்தல், சூழியல் அதிர்வு தாங்குமண்ட லம் என தொடர்ந்து பல முனை தாக்குதல் களால் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் தற்போது புதிய வீடுகள் கட்ட, பழுத டைந்த குடியிருப்புகளை சரிசெய்ய, கழிப்பிடம் கட்ட என பல்வேறு பணிக ளுக்காக கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் போது வனத்துறையினர் சோதனைச்சாவடியிலேயே அனுமதி மறுத்து தடுத்து நிறுத்துகின்றனர். மேலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் தொடர்ந்து அனுமதித்து வருகின்றனர். ஏற்கனவே கோதையாறு பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் மின் ஊழியர்களின் குழந்தை கள் படிக்கும் அரசு பள்ளி கட்டுமான பணிக்கு கூட கட்டுமான பொருட்களை அனுமதிக்காமல் வனத்துறையினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இவ்வாறு கோதையாறு, வாழை யத்துவயல், கூவக்காலை உள்ளிட்ட பல மலையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் அனுமதிக்கா ததால் போராட்டங்களில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது.
2006 வன உரி மைச்சட்டம் மலைவாழ் மக்கள் வனங்க ளில் வாழ்வதற்குரிய பல்வேறு உரிமை களை அளித்திருந்தாலும், மாவட்ட வன அதிகாரி மற்றும் வனத்துறையினர் சட்டத்தை மீறி, உரிமைகள் மறுத்து தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து, தங்கள் வாழ்விடங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி தனியாருக்கு வன வளங்களை சுரண்டு வதற்கு மாவட்ட வனத்துறை உதவுகிற தோ என்ற சந்தேகத்தை மலைவாழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அத்துமீறல்கள் இதுகுறித்து தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்ப வர் கூறுகையில், தடிக்காரன்கோணம், புதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டு மான பணிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்ற னர். புதிதாக வீடு கட்டுமானம் செய்யும் போது பட்டா உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை வத்துறையினரிடம் கொண்டு சென்று ஒவ்வொரு லோ டுக்கும் அனுமதி கேட்க வேண்டிய நிலை உள்ளது. பலநேரங்களில் அனுமதி கிடைக்காமல் மக்கள் பலமுறை அலை கழிக்கப்படுகின்றனர் என கூறினார். கீரிப்பாறை பகுதியை சேர்ந்த விஸ்வம்பரன் என்பவர் கூறுகையில், கீரிப்பாறை பகுதியில் கடந்த ஒக்கி புயலின் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் இதுவரை கட்டப்பட வில்லை. கீரிப்பாறை தோட்ட தொழி லாளர்களின் குடியிருப்பும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. ஆனால் குடியிருப்புகளில் பராமரிப்பு கட்டுமான பணிகளை செய்ய கட்டுமான பொருட்கள் கொண்டுவர வனத்துறை அனுமதி மறுத்துவருகிறது.
இதனால் பழுதடைந்த குடியிருப்பு களை சரி செய்ய வழியின்றி பாது காப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறோம். மேலும் பாலம் கட்டப்படாத நிலையில் திடீரென ஆற்றில் வெள்ளம் வந்தால் குடியிருப்பு பகுதி துண்டிக்கப்படும் சூழல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் உள்ளது. எனவே தமிழக அரசு உட னடியாக தலையிட்டு மலைப்பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிப்பதுடன், கீரிப்பாறை பாலத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கூறினார். வனப்பகுதியில் வேலை பறிப்பு, வளர்ச்சிப்பணிகளுக்கு தடை, வன விலங்குகளால் உயிர்பயம், நிலம் மீதான உரிமைகள் மறுப்பு என தாக்கு தல்கள் தொடர்ந்தால் குமரி மாவட்ட மக்கள் மாபெரும் போராட்டத்துக்கு தள் ளப்படுவார்கள். மத்திய மாநில ஆட்சி யாளர்கள் பதலளிக்கும் கட்டா யம் ஏற்படும்.