tamilnadu

img

மின் இணைப்பு, இலவச குடிநீர் இணைப்பு கேட்டு ஈத்தாமொழியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை 18- இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றி யம், தர்மபுரம் ஊராட்சியில் மின் இணைப்புக்கு  ஊராட்சி நிர்வாகம் கூடுதல் தொகை வசூல் செய்வதை தடுத்து நிறுக்கவும், மத்திய அரசின் திட்டத்தில் இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈத்தாமொழி சந்திப்பில் சனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டார செயலாளர் எஸ்.டி.ராஜகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் பேசினார், இதில், தங்கப்பன்,   அருணாசலம், சாகுல்ஹமீது, தாமோதரன், சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.