நாகர்கோவில், ஜூன் 15- கோவிட் 19 தொற்று தடுப்பு நட வடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் குமரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்கள், பொதுமக்கள் வேலைகளை இழந்து வருமான மின்றி கொடும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கு நடவடிக்கையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை பாதுகாக்கும் வகையில் பாதிக்கப்பட்டுள்ள அனை வருக்கும் கோவிட் 19 கால நிவாரண நிதி ரூபாய் 7500 வழங்க கேட்டு திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் இரணியல் சந்திப் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, நாகராஜன் தலைமை வகித்தார். முரளி, வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் ஆகி யோர் பேசினர். இதில் சிவமோகன், சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.