நாகர்கோவில், ஜூன் 11- குமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டாரம், கண்ணன் விளை கிராமத்தில் சுகாதார ஊழி யருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து முழுமையாக அடைக்கப்பட் டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிள்ளியூர் வட்டார செயலா ளர் எம்.ஏ.சாந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா தடுப்புச் சார்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரப் பணியாளர் களுக்கு தொற்றுப் பரவாமலிருக்கவும் ஒருவேளை தொற்று பரவி விட்டாலோ அதற்கான வாய்ப்பிருந்தாலோ என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதனை மாவட்ட நிர்வாகம் கவனிக்கா மல் விட்டதன் விளைவு இன்று கண்ணன் விளை பகுதி தொற்று நோய் மையமாக மாறி இருக்கிறது. கண்ணன் விளைப் பகுதி மட்டுமல்லாமல் அதன் அருகாமையில் இருக்கும், பாலூர், கருங்கல் உள்ளிட்ட பல பகுதி மக்களும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
கண்ணன் விளைப் பகுதியானது தொற்று மையமாக அறிவிக்கப்பட்டு முழு வதும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நட வடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகப் படுத்த வேண்டும். அப்பகுதி சீல் வைக்கப் பட்ட முதல் நாள் வெறும் 22 பேருக்கு மட்டுமே பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட் டுள்ளன. ஆனால், தொற்றுக்கு உள்ளான சுகாதாரப் பணியாளரும் அவரது குடும்பத்தி னரும் கிட்டதட்ட அனைத்து வீடுகளிலும் தொடர்பு வைத்திருந்தனர். ஆகவே, அப்பகு தியில் வசிக்கும் எல்லா வீடுகளில் உள்ள மக்களுக்கும் ஒரு நபர் கூட விடாமல் கொரோனா தொற்றிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். முழுவதும் சீல் வைக்கப்பட்டு அடைக் கப்பட்டுள்ள நிலையில் வேலை இழந்து தவிக்கும் அப்பகுதி மக்களுக்கு நிவார ணமாக குடும்பம் ஒன்றிற்கு ரூ.2000 வீதம் வழங்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூர் ஒன்றியக் குழு சார்பாக கேட்டுக் கொள்வதுடன், இனி வருங்காலங்களில் சுகாதாரப்பணியாளர்களுக்கு இதுபோன்ற தொற்றுகள் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வா கம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை செய்ய வேண்டும் எனவும் கூறப் பட்டுள்ளது.