நாகர்கோவில், ஜூலை 16- கன்னியாகுமரி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்க செயலாளர் தோழர் ராகவன் (59) செவ்வாயன்று காலமானார். இவர் சிபிஎம் களியல் வட்டாரக்குழு உறுப்பினராகவும், கடையால் பேரூராட்சி யில் கவுன்சிலராகவும், விவசாயத் தொழிலாளர் சங்க வட்டார செயலா ளராகவும், முறைசாரா தொழிலாளர்க ளை திரட்டுவதிலும் சுய உதவி குழுக்க ளை அமைப்பதிலும் அறிவியல் இயக் கத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர். அருமனை கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டவர். அவரது இறுதி நிகழ்ச்சி அரகநாட்டில் அவரது இல்லத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், தோட்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பி னர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது மனைவி லைலா கடையல் பேரூராட்சி முன்னாள் உறுப்பினராக செயல்பட்டவர். அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.