நாகர்கோவில், ஜூலை 18- மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கிடவும், வேலை மறுக்கப்படும் 55 வயதுக்கு மேலான தொழிலாளர்களுக்கு தினமும் வழங்க வேண்டிய கூலியை நிவார ணமாக வழங்கிடவும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் நூறுநாய் வேலை மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஒருமாதமாக சுமார் 5000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் வேலை செய்வதற்கான இடம் மற்றும் நிதி ஆதா ரங்கள் இருந்தும் அனைவருக்கும் வேலை வழங்க வாய்ப்பிருந்தும் பல ஊராட்சிகளில் வேலை வழங்காமல் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை யின்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பாரபட்சமின்றி அனைவருக்கும் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.