tamilnadu

img

தேசிய மீன்வளக் கொள்கை-2020 கைவிடக் கோரி மீன் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஆக.20- கடல் மற்றும் கடல் வளத்தை பன்னாட்டு கார்ப்பரேட் நிறு வனங்கள் கொள்ளையடிக்கும் வகையிலும், உள்நாட்டு மீனவர்க ளையும், பாரம்பரிய மீனவர்களை யும் மீன்பிடித்தொழிலிலிருந்து அப்புறப்படுத்தும் தேசிய மீன் வளக்கொள்கையை கைவிடக் கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் விரோத சுற்று சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை 2020 ஐ கைவிட வேண்டும், எந்த வித அறிவிப்பும் இல்லாமல் வள்ளம், நாட்டு படகுகளுக்கு பதிவு கட்டணம் ரூபாய் 2 ஆயி ரத்து 500 வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கன்னியா குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று நடந்த ஆர்ப்பாட்டத்தி ற்கு, தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுச்செய லாளர் எஸ்.அந்தோணி தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.நூர்முகமது, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொருளாளர் எம்.அகமது உசேன், சிஐடியு மாவட்ட செய லாளர் கே.தங்கமோகன், கன்னி யாகுமரி மாவட்ட மீன் தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் கே. அலெக்ஸாண்டர் ஆகியோர் பேசி னர். இதில், நிர்வாகிகள் பிராங்க ளின், தனிஸ், செல்வராஜ், ஜேசு ராஜன், அலெக்ஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.