tamilnadu

தொழிலாளிகள் 2 பேர் பலி

அருமனை, ஏப்.17 -குமரி மாவட்டம் ஆறுகாணியைச் சேர்ந்த பாலேஷ், அபிமன்யு என்ற உன்னிக்குட்டன்(22), கடையாலுமூடு காட்டவிளையைச் சேர்ந்த ஜெகதீஸ்(35) என்ற கட்டிட தொழிலாளிகள் வழக்கம்போல் வேலைக்காக இரு சக்கர வாகனத்தில் அருமனை குஞ்சாலுவிளை பகுதி வழியாக களியக்காவிளைக்கு சென்றபோது, தெரு நாய் ஒன்று குறுக்கே வந்து வாகனத்தில் மோதியது. இதனால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் ஜெகதீஷ் சம்பவஇடத்திலேயே பலியானார். மற்ற இருவரையும் பொதுமக்கள்மீட்டு முதலுதவிக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லும் வழியில் அபிமன்யு (எ) உன்னிக்குட்டன் உயிரிழந்தார். பாலேஷ் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;