வீட்டில் தானியின் சேலையில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி, சேலை இறுக்கி பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் குலாலர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் அக்ஷயா (13). 7ஆம் வகுப்பு படித்து வந்தார். அக்ஷயா தனது வீட்டு மாடியில் தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சேலை கழுத்தில் இறுக்கியதில், மூச்சு திணறி ஏற்பட்டு அக்ஷயா துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அலறி துடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று அக்ஷயாவின் உடலை கீழே இறக்கினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.