tamilnadu

img

யார் பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது?

கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் டி.கே.ரங்கரா ஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ. 43 லட்சம் செலவில் இரண்டு மாடிகளைக் கொண்ட வேதியல், உயிரியல், விலங்கியல் துறைகளுக்கான ஆய்வுக்கூட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை மார்ச் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டி.கே.ரங்கராஜன் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்கு அவரும் கடலூர் வருகை தந்தார். பள்ளி யின் சார்பில் திறப்பு விழா நிகழ்ச்சி மிக எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.தேன்மொழி  தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர் டி.பிரவீனா, ஊராட்சி மன்றத் தலைவர் நாராய ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாதவன், ஒன்றியச் செயலாளர் ஜே.ராஜேஷ்கண்ணன், நகரச் செய லாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கட்டிடத்தின் வாயிலில் ரிப்பனை வெட்டி உள்ளே சென்று பார்த்த எம்பி டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட பலருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால்,  இந்த கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  ஜனவரி மாதம் 6 ஆம் தேதி திறந்து வைத்ததாக மாநில அரசு சார்பில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு பள்ளி யின் சுவற்றில் வைக்கப்பட்டி ருந்தது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் டி.கே.ரங்கராஜன் கேட்டதற்கு, அதிகாரிகள் ஏற்கனவே வந்து கல்வெட்டை பதித்து விட்டு சென்று விட்டார்கள் என்று சர்வசாதாரண மாக கூறினார். “அனைவருக்கும் கல்வி, வேலை என்ற முழக்கத்தை முன்வைத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எம்பி- எம்எல்ஏக்கள் பதவியையும் அதற்காகத்தான் பயன்படுத்தி வருகிறது. அதன்அடிப்படையில் தான் திருவந்திபுரம் அரசுப் பள்ளிக்கு ரூ. 43 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டடங்கள் கட்டிக்கொடுக் கப்பட்டது. இந்த கட்டிடத்தையும், பொருட்களையும் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த நிதி என்னுடைய சொந்த நிதி கிடையாது, உங்களுடைய வரிப்பணம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் வழியாக மக்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு கொடுக்கப்பட்டது. என்ன தான் நாங்கள் ஒழுக்கமாக இருந்தாலும், மற்ற வர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.  இந்த கட்டடத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதி கமிஷனாக கரைந்துள்ளது. இப்படி சொல்வதால் கடலூர் மாவட்ட ஆட்சியர் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை” என்றார் டி.கே. ரங்கராஜன். கல்வி, பொதுப்பணித் துறை அதிகாரிகளின் இந்த செயலை எம்பி உள்ளிட்ட அனைவரும் கண்டித்தனர். மாவட்ட ஆட்சிய ருக்கும் நிகழ்சியில் கண்டனம் தெரிவித்து அவருக்கு கடிதம் எழுதுவதாகவும் டி.கே. ரங்கராஜன் கூறினார். அரசின் இந்த செயல்பாடுகள் அங்கிருந்த பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மாணவர்களுக்கு அரசின் நடவடிக்கை முகசுளிப்பை ஏற்படுத்தியது. மாநிலங்களவை உறுப்பி னர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் கல்வி வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற் காகவும் கட்டப்பட்ட கட்டிடத்தை நிதி ஒதுக்கீடு செய்த சம்பந்தப் பட்ட மாநிலங்களை உறுப்பின ருக்கு தெரிவிக்காமல் திறந்து வைத்தது சரியான நடைமுறை யில்லை என்பது ஒருபுறம் என்றாலும், தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டில் முதலமைச்சர் பெயர் மட்டுமே உள்ளது. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? எந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது? யார் நிதி ஒதுக்கியது? என்ற எந்த விவரம் இல்லை. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்து கட்டிக் கொடுத்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ‘பெற்காத பிள்ளைக்கு’ தமிழக அரசு உரிமை கொண்டாடுவதை பார்க்கும்போது தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நிதி ஒதுக்கியதாக கணக்கு எழுதலாம், பணத்தை சுருட்டலாம் என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.