tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு உ.வாசுகி பிரச்சாரம்

கடலூர், டிச. 25- கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்  சிலர் பதவிக்கு போட்டியிடும்  மார்க்சிஸ்ட் கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து மத்தியக்  குழு உறுப்பினர் உ.வாசுகி பிரச்சாரம் மேற்கொண்டார். கடலூர் ஊராட்சி ஒன்றி யம் 28 வது கவுன்சிலர் பத விக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பா ளர் சுமதி ஆளவந்தாரை ஆத ரித்து சுத்துகுளத்தில் நடை பெற்ற பிரச்சார தெரு முனைக் கூட்டத்தில் உ. வாசுகி பேசினார்.  கடலூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு  23வது வார்டில் நடுவீரப்பட்டு சிஎன் பாளையம் பகுதியில் போட்டியிடும் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தட்சி ணாமூர்த்திக்கு வாக்குகள் கோரியும் உரையாற்றினர். பண்ருட்டி ஊராட்சி ஒன்றி யம் 12 வது வார்டில் போட்டி யிடும் வெ.பூர்வச்சந்திரனுக்கு  வாக்குகள் கேட்டு காட்டு பாளையத்திலும் கடலூர் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் திருத்துறையூர் அக்கடவல்லி 4 வது வார்டு  ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிடும்  ஒன்றியச் செய லாளர் ஆர்.லோகநாதனும் வாக்குகள் கோரி பிரச்சாரம் மேற்கொண்டார். பண்ருட்டி ஊராட்சி ஒன்றி யத்தில் 3 வது வார்டு ஒன்றிய  கவுன்சிலர் பதவிக்கு போட்டி யிடும் ஏ.பன்னீருக்கு ராயர் பாளையத்திலும் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரங்களில் மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம், மாநிலக் குழு உறுப் பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. உதயகுமார், எஸ்.திருஅரசு,  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;