கடலூர், ஜூலை 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட் டம் விளைவாக சாலையே இல்லாத கிராமத்திற்கு புதிதாக சாலை அமைக்கப் பட்டது. விருத்தாச்சலம் வட்டம் ஆதனூர் ஆதிதிராவிட பகுதி யில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை இல்லாமல் இருந்தது. அந்த கிராமத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், அதிகாரிகளி டம் மனு அளித்தல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடை பெற்றன. இதன் விளைவாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வீ.சிவ ஞானம், வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன், வட்டக் குழு குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வன், மின்ன ரங்க சிஐடியு தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.