tamilnadu

img

பெற்ற குழந்தைகளை கால்வாயில் வீசி கொன்ற தாய்

கடலூர் மாவட்டத்தில் மூன்று பெண் குழந்தைகளை, பெற்ற தாயே கால்வாயில் தூக்கி வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சாத்தப்பாடி கிராமத்தில் மணிகண்டன் - சத்தியவதி தம்பதிகள் வசித்து வருகின்றனர். மணிகண்டனின் மது பழக்கத்தால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் ஏற்பட்ட சண்டையினால் கோபித்து கொண்ட சத்தியவதி தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து மீராளூரில் இறங்கிய சத்தியவதி தனது மூன்று குழந்தைகளையும் அருகில் உள்ள கால்வாயில் வீசியுள்ளார். அதில் மூன்று குழந்தைகளும் சம்பவ இடத்திலே உயிரிழந்தது. இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் சத்தியவதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

;